பிரபல தங்க நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் ராஜவீதி பகுதியில் முத்ரா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் தங்கநகைக் கடை மற்றும் முத்ரா புல்லியன்ஸ் என்ற பெயரில் தங்கக்கட்டி விற்பனையும் செய்து வருகிறார். 

இந்த நிலையில் சிவகுமார் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சிவகுமாரின் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் போது, வியாபாரம், பணபரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வருமான வரித்துறை சோதனைக்குப் பின் வரி செலுத்தியது மற்றும் தங்கம் விற்பனை தொடர்பான ரசீதுகள் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அங்கு சோதனை எதுவும் நடத்தப்படவில்லை எனவும், வருமான வரி தொடர்பான விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் சேகர்ரெட்டி, முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், கோவையில் தங்க நகை கடையில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...