அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியதாரர்கள்


அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி 500-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 5 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த மாதத்திற்கான ஓய்வூதியம் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படாத நிலையில் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது ஓய்வூதியத்திற்கான தொகை இதுவரை வழங்கப்படவில்லை என பதில் அளித்துள்ளனர். 

இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் அதன் வாயிலின் முன்பாக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், உடனடியாக ஓய்வூதியம் வழங்காதபட்சத்தில் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...