ஐரோபோசக்ரா சார்பில் ரோபோகார்னிவல் 2017 போட்டி கோவையில் நடைபெறவுள்ளது


ஐரோபோசக்ரா என்ற கோவையைச் சேர்ந்த ரோபோட்டிக் பயிற்சி நிறுவனம் சார்பில் ஐரோபோசக்ரா ரோபோகார்னிவல் 2017 என்ற போட்டி நிகழ்ச்சி கோவையில் நடைபெறவுள்ளது. 

பெங்களூரைச் சேர்ந்த நோவாடிக் ரோபோட்டிக்கள் என்ற நிறுவனத்துடன் அமெரிக்காவின் மெக்சிகனில் உள்ள லாரன்ஸ் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி இணைந்து நடத்தும் இப்போட்டியில் ஒரு அறிவியல் வினாடி- வினா போட்டியும் நடைபெறவுள்ளது.

ஐரோபோசக்ரா உலக ரோபோடிக் சாம்பியன்ஸ்சிப்பின் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளராகும். இந்த போட்டியில் வெற்றிபெறுவோர் மெக்சிகனில் உள்ள பல்கலையில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.

தற்போது, இரண்டாம் வருடமாக நடைபெறவுள்ள இப்போட்டியின் முதற்கட்ட போட்டிகள் வரும் ஜனவரி 27ம் தேதியும், இறுதிப் போட்டி 28ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். மேலும், இப்போட்டியில் வெற்றிபெறுவோருக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்கு முன்பதிவு செய்ய  8940912444 அல்லது 9655312329 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...