பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விருதுத் தொகை காசோலைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் திங்களன்று நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2015- 16 ஆம் ஆண்டுக்கான விருதுத் தொகைகளை ஆட்சியர் வழங்கினார்.

இதில், கிரண் பிரனேஷ் என்பவருக்கு முதலமைச்சரின் தகுதிப் பரிசு தொகை 3000 ரூபாயிக்கான காசோலையினையும், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற பி.யுவஸ்ரீ-க்கு 2000 ரூபாய்க்கான காசோலையினையும், கிராமப்புற பெண் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் 308 மாணவிகளுக்கு 1 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினையும் வழங்கினார்.

மேலும், மாவட்ட அளவில் முதல், இடண்டாம், மூன்றாம் நிலைகள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவுகளும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...