குடிபோதைக்காக தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டவரை கைது செய்த காவல் துறையினர்


கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக காட்டூர், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இருசக்கர வாகனத்திருட்டு தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இதில், குற்றவாளியைப் பிடிப்பதில் காவல் துறையினர் மத்தியில் தாமதம் ஏற்பட்டு வந்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சமீபத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் உணவு விடுதி ஒன்றில் இருசக்கர வாகனத் திருட்டு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரித்தனர். 

இதில், வாகனத் திருட்டில் ஈடுபட்டவரின் முகம் தெரிந்ததைத் தொடர்த்து, திருட்டில் ஈடுபட்டவரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது பெயர் முகமது ரஃபீக் (43) என்பதும், துடியலூரில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

செல்போன் கடையில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக வாகனத்திருட்டில் ஈடுபட்டதாகவும், அதனை 1000, 500 ரூபாய்க்கு விற்று மது அருந்தி  வந்ததும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, திருடப்பட்ட 5 இருசக்கர வாகனங்களை மீட்ட காவல் துறையினர், தொடர்ந்து மேலும் இவரால் இதுபோல் வேறு வாகனங்கள் திருடப்பட்டுள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...