அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலகிய அ.தி.மு.க-வினர் கோவையில் ஜெ-தீபா பேரவை துவங்கினர்


அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் அக்கட்சியில் இருந்து விலகியவர்கள் ஜெ-தீபா பேரவை என்ற அமைப்பை துவங்கியுள்ளனர்.

தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அவரது தோழி சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதனிடையே சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்க வேண்டுமென, அக்கட்சி அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெ-தீபா பேரவை என்ற அமைப்பை துவக்கி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் அ.தி.மு.க தொண்டர்கள் ஜெ-தீபா பேரவை அமைப்பை துவக்கினர். சசிகலா தலைமையை ஏற்க பிடிக்காததால் அ.தி.மு.க வில் இருந்து விலகி இந்த அமைப்பை துவக்கி இருப்பதாகவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டுமெனவும் ஜெ-தீபா பேரவையினர் தெரிவித்தனர். 

அ.தி.மு.க வில் சசிகலா மற்றும் தீபா ஆதரவாளர்கள் இரு பிரிவினராக செயல்பட்டு வருவது, அக்கட்சி தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...