ஊதியப் பிரச்சனைக்கு தீர்வுகோரி பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஊதியப் பிரச்சனைக்கு தீர்வுகோரி பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



அம்மனுவில், கோவை மாவட்டம், மயிலேரிபாளையம் கிராமம், பொள்ளாச்சி சாலையில் செயல்படும் டி டி கே பிரஷ்டீஜ் லிட் நிறுவனத்தில் ஊழியர்களான நாங்கள் சுமார் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம்.

நிர்வாகம் நிர்ணயிக்கும் அளவிற்கு ஏற்றாற்போல் ஊழியர்களும் தரமான வகையில் சமையலுக்கு தேவையான குக்கர்களை தயாரித்துக் கொடுப்பதால் அதிக லாபத்துடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், எங்களுக்குரிய பணிகள் நிர்ணயம் செய்யப்பட்டு, அதற்குரிய சம்பளம் வழங்கப்படுவது இல்லை. ஒசூரில் செயல்படும் எங்களது தலைமை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சமமான பணி மூப்பு பணி அளவுகளை செய்து வரும் தொழிலாளர்களின் சம்பளத்தில் சுமார் 30 சதவிகிதம் மட்டுமே எங்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. 

எங்களது தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பலன் இல்லாததால் நாங்கள் பி எம் எஸ் என்னும் மிகப்பெரிய மத்திய தொழிற்சங்க அமைப்புடன் இணைக்கப்பட்ட பாரதீய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து மனு அளித்துள்ளோம்.

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தங்களுக்கு உரிய ஊதியம் பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...