ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆட்டோ மீட்டர் கட்டண பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட பாரதீய போக்குவரத்து ஆட்டோ, டெம்போ, மினிடோர் தொழிலாளர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் ஆட்டோ மீட்டர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆட்டோ தொழிலாளர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொண்ட மீட்டர் கட்டணமான குறைந்தளவு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.30, அடுத்து வருகிற ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.15ம் அரசு வழங்கினால் அந்த கட்டணத்தை அமல்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களும், தொழிற்சங்கங்களும் தயாராக உள்ளோம்.

இருப்பினும் ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சனையில் தமிழக அரசு பாராமுகமாகவே செயல்பட்டு வருகிறது.

இச்சூழ்நிலையில், ஆட்டோ தொழிலையும், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் வகையில் இந்த தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மீட்டர் கட்டணத்தை நீதிமன்றம் அறிவித்தபடி தொழிற்சங்கத்தை அழைத்து பேசி உடனே கட்டணத்தை முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும். தமிழக அரசு சென்னைக்கு அறிவித்தது போல் தமிழகம் முழுவதும் அனைத்து ஆட்டோக்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்திய மீட்டர் வழங்க வேண்டும்.

ஆட்டோ தொழில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தாலும், கோவை மாவட்டத்தில் அதிகமான ஆட்டோக்கள் இருப்பதாலும் ஆட்டோக்களுக்கு வழங்கும் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...