பீட்டா அமைப்பு 34 ஆயிரம் உயிரினங்களை கொன்றுள்ளதாக அமெரிக்கர்கள் குற்றச்சாட்டு


ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடையை பெற்றுத்தந்த அமைப்பு 'பீட்டா'. 

1989-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறது. அதனால், இந்த அமைப்புக்கு வரும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டது. 

இந்த நிலையில், பீட்டா அமைப்பு தொடங்கியது முதல் இதுவரை சுமார் 34 ஆயிரம் விலங்குகளை அந்த அமைபினர் கொன்று குவித்ததாக அமெரிக்கர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

பீட்டா விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்குள் கொண்டுவரப்படும் விலங்குகளில் 97 சதவிகிதம் கொல்லப்படுவதாக அரசு ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நுகர்வோர் சுதந்திர மையம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு, 'பீட்டா விலங்குகளை கொல்கிறது' (petakillsanimals.com) என்ற பெயரில் இணையதளம் ஒன்றை துவங்கி அதற்கு ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்கள். மேலும், அந்த நாடு முழுவதும் பீட்டா அமைப்புக்கு எதிரான விளம்பரப்பலகைகள் வைத்து, பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 

நாளொன்றுக்கு சராசரியாக 6 விலங்குகள் பீட்டா அமைப்பினரால் கொல்லப்படுவதாக கூறும் நுகர்வோர் சுதந்திர மையம், பீட்டவிற்குள் கொண்டுவரப்படும் நாய் மற்றும் பூனைகள் அடுத்த 24 மணி நேரத்தில் கொல்லப்படுகிறது என்ற வெர்ஜீனியாவின் கால் நடைத்துறையின் 2010ம் ஆண்டு ஆய்வை சுட்டிக்காட்டியுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...