காவல்துறை மற்றும் கேம்சிஎச் மருத்துவமனை இணைந்து விபத்து இல்லாத புத்தாண்டு கொண்டாட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடு


புத்தாண்டு கொண்டாடும் தருணத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதை தடுப்பதற்கு கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, மாநகர காவல் துறையினருடன் இணைந்து கோவை மாநகரத்தின் முக்கிய சாலை ஓரங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு அத்துமீறல்கள் சாலையில் நடந்து வருவது தெரிந்ததே. டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு சாலைகளில் மது அருந்திவிட்டு ஆட்டம், பாட்டம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் சிலர் ஈடுபடுகின்றனர். மேலும் சிலர் மது அருந்திவிட்டு வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். இந்த விபத்தில் இவர்கள் மட்டுமில்லாமல் சில நேரங்களில் பொது மக்களும் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.

இத்தகைய குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நூதன நடவடிக்கைகளை மாநகர காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். இம்முறையும் கோவை மாநகர காவல் துறை, கேஎம்சிஎச் மருத்துவமனையுடன் இணைந்து 22 கண்காணிப்பு மையங்கள் அமைக்க உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க இந்த கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மையங்களில் அவர்களுக்கு கஷ்தூர்பா காந்தி மதுபோதை மீட்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தன்னார்வ தொண்டர்கள் கவுன்சிலிங் அளித்து இரவு முழுவதும் கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.

இதுகுறித்து, கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், இந்த கண்காணிப்பு மையங்கள் மாநகரத்தின் முக்கியமான சாலைகளில் அமைக்கப்படும். மற்றும் முன்னெச்சரிக்கையாக முக்கிய இடத்தில ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும் என்றார். இதன் மூலம் விபத்து இல்லாத 2017 புத்தாண்டினை கொண்டாட முயற்சி செய்வோம் என்றும் கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...