ஜல்லிகட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தகவல்

ஜல்லிகட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சசிகலா அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அவர்கள் கட்சியின் விவகாரம் எனவும் நாளை சசிகலா முதல்வராகவும் முடியும் எனவும் தெரிவித்தார். 

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் ஜனவரியில் தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் ராகுல் காந்தி போன்றோர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.



கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் சரியாக திட்டமிடவில்லை எனவும், தவறு நிதியமைச்சகத்தில் நடந்து இருப்பதாகவும், இதை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு  வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க-விற்கு புதிய செயற்குழு, பொதுக்குழு போன்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக பா.ஜ.க-விற்கு புதிய தலைமை தேவைப்படுகின்றது. வரும் ஜனவரி 6, 7- ஆம் தேதிகளில் தேசியக் குழு நடக்கும் நிலையில் இதை பரீசிலிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலாவிற்கு திறமையில்லை என காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்வதாகவும், சோனியா காந்தி என்ன தகுதிகளுடன் அரசியலுக்கு வந்தார் எனவும் ராகுல் காந்தி பட்டப்படிப்பு படிக்கவே இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

ஜல்லிகட்டு போட்டிகளில் இதுவரை எந்த காளைகளும் உயிரிழக்கவில்லை எனவும் தனது வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் வைத்து இருப்பதாகவும், ஜல்லிகட்டு விவகாரத்தில் கட்டுப்பாடுகளுடன் நீதிமன்றம் அனுமதி அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...