வால்பாறையில் டாக்டர். அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் துவக்கவிழா


வால்பாறையில் டாக்டர். அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பழனிச்சாமி வரவேற்புறை ஆற்றினார். வால்பாறை வட்டாட்சியர் கோமதி தலைமை வகித்தார்.



தேயிலைத் தோட்ட நிறுவன ஆய்வாளர் ஜே.ஏ.முகமது யூசுப், வழக்கறிஞர் அசோகன், வால்பாறை நூலகம் வேலூச்சாமி, வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெபராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் தமிழ்மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். 

இதைத்தொடர்ந்து, அம்பேத்கார் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநர் கணேஷ் சிறப்புறையாற்றுகையில், வால்பாறை மற்றும் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வால்பாறை பகுதியில் படித்த அனைத்து மாணவ மாணவிகளும் பயன்பெறும் விதமாக இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவங்கப்பட்டதாக தெரிவித்தார்.



வட்டாட்சியர் கோமதி பேசுகையில், வாரத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களில் நடக்கும் இந்த இலவச பயிற்சி மையத்தில் படித்து இப்பகுதியில் படித்த மாணவ மாணவிகள் அனைவரும் எஸ்டேட்டில் தங்களது பெற்றோர்களின் கஷ்ட நிலையினை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று வலியுறுதினார். 

இந்நிகழ்ச்சியில், ஏராளமான மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர் கணேஷ், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...