கோவையில் நவீன ரத்த வங்கி மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மையத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் இசை நிகழ்ச்சி!

இந்தியன் ரெட் கிராஸ் சோசைட்டி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வெல்ஃபேர் அசோஷியேஷன் இனைந்து கோவையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள நவீன ரத்த வங்கி மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மையத்தின் வளர்ச்சிக்கான தொகையீட்டும் வகையில் நடத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

'தனா' ரத்த வங்கி மற்றும் 'ஆதரவு' என்ற மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையத்தின் மேம்பாட்டிற்காக 'தரங்கி' என்னும் இசை நிகழ்ச்சி ஜனவரி 2ம் தேதி அவிநாசி சாலை, நவ இந்தியாவில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சியில் சங்கர் மஹாதேவன் மற்றும் சிவமணி இனைந்து மூன்று மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் கார்த்திக் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்ச்சியை விஜய் டிவி பேச்சாளர் பாவனா தொகுத்து வழங்க உள்ளார்.



இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை  பெற்றுக்கொள்ள அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் சந்திரா ஹூண்டாய் ஷோரூம்கள், கோவை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களிலும் இணையதளத்தின் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். நுழைவுச்சீட்டு ரூபாய் 250 முதல் 10,000 வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7397044999 மற்றும் 7397770555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...