வேளாண் பல்கலையில் வளங்குன்றா வேளாண்மையில் நுண்ணுயிர்கள் குறித்து கலந்துரையாடல்

சர்வதேச பயறு வகை பயிர்களுக்கான ஆண்டின் (2016) முக்கிய சிறப்பு நிகழ்ச்சியாக, “வளங்குன்ற வேளாண்மையில் நுண்ணுயிர்கள் - உழவர்கள் சிறப்பு கலந்துரையாடல்” தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் நுண்ணுயிரியல் துறையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கலிருந்தும், 75 உழவர் பெருமக்களும், தமிழக அரசின் வேளாண் துறையில் நுண்ணுயிர் உர உற்பத்தி ஆய்வகத்தில் பணியாற்றும் வேளாண் அலுவர்களும் பங்கேற்றனர்.  



இவ்விழாவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இராமசாமி தலைமையேற்று துவைக்கி வைத்தார். தனது துவக்க உறையில்; பயிறுகளின் முக்கியத்துவம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள உயர் தொழில் நுட்பங்கள், வேளாண் விரிவாக்க செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். மேலும் உழவர்களும் மாணவர்களும் இப்பல்கலைகழகத்தின் இருகண்கள் என உழவர்களை முன்னிருத்தி தனது துவக்க உரையாற்றினார். 



பிலிப் விரிவாக்கக் கல்வி இயக்குனர் வாழ்த்துரை வழங்கினார். நவீன உயிர் உர உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் உபயோகிக்கும் முறைகள் பற்றியும் செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் பயிறுவகை பயிர்களுக்கான செறிவூட்டப்பட்ட ரைசோபிய உயிர் உரம் அறிமுகம் படுத்தப்பட்டு, விதை நேர்த்தி, அதை செய்யும் முறை பற்றியும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நவீன உயிர் உரஉற்பத்தி ஆய்வகத்தை நேரில் கண்டு பார்வையிட்டனர்.  இவ்விழாவில் நவீன உயிர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரால் வெளியிடப்பட்டது.

இயற்கை வள மேம்பாட்டு இயக்குனரக தனி அலுவலர் குமார் வரவேற்றார். வேளாண் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் மாரிமுத்து நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...