எஸ்.என்.ஆர் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் பெங்களூர் மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் குழுமம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை 04.01.2017 அன்று காலை 9 மணிக்கு நவ இந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் மனுதாரர்கள் வேலையளிப்பவர்களுக்கு எவ்வித கட்டணமும் அளிக்க தேவையில்லை. இம்முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் வேலை பெறும் மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்மனுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம்.  

எனவே, இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...