கோவையில் ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் - எல்ஈடியில் புதிய விளக்குகள் அறிமுகம்

ஜீட்டா ஜி பிளஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாட்டில் முன்னணி 'ஸ்டார்ட் அப்' நிறுவனமாகும். நவீன தொழில் நுட்பம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புடன் கோவையில் ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்ஈடி லைட்டிங்ஸ் துறையில் புதிய அறிமுகங்களை ஜீட்டா ஜி சந்தை படுத்தவுள்ளது. இதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக கோயமுத்தூர் ஹிந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் கலந்து கொண்டு நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கௌரவ விருந்தினராக கோயமுத்தூர் கிரடாய் அமைப்பின் தலைவர் ராஜேஷ் லுண்ட் குத்துவிளக்கேற்றினார். 


ஜீட்டா ஜி பிளஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயலாக்க இயக்குனர் சேகர் கூறுகையில்; அலங்கார விளக்குகள் மூலம், கார்பன் மாசு குறைக்கப்படுவதும், ஆபத்தான பொருட்களை விளக்குவதும் என பாதுகாப்பு அம்சத்துடன் எரிசக்தி சிக்கனமும், இணைந்து ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் தயாரிக்கப்படுகின்றன. ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் எரிசக்தி சிக்கனம் மூலம், புவி வெப்பமாதலைக் குறைக்கவும், தீங்கற்ற வகையில் ஒளிபெறவும் மெசோபிக் லைட்டிங் தொழிநுட்பத்தை பயன்படுத்துகிறது. பாரத பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் எல்ஈடி விளக்குகள் பொருத்தி இந்த பகுதியில் தீவிரப்படுத்தப்படுகிறது. 



இந்நிறுவனம் துவக்கத்தில் சுமார் ரூபாய் ஒன்றரை கோடி முதலீடு செய்துள்ளது. புதிய பிரண்டையும் பரவலாகவும் இத்தொகை பயன்படுத்தப்படும். சணல் பார்ட்னர்கள், விற்பனை மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் சேவைகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. என்றார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...