மோசடி, நம்பிக்கை மோசடி என இருபிரிவில் பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் மீது வழக்கு பதிவு

கோவையை சேர்ந்த பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் மீது மோசடி, நம்பிக்கை மோசடி என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சாவடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரசாமி கவுண்டர். விவசாயியான இவர் தனது மகள் ஞானசௌந்தரியை கடந்த 2009 ஆம் ஆண்டு பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஞானசௌந்தரி அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கிடையே மகளின் திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ரூ.ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பிலான நிலம் மற்றும் நகைகளை திருப்பி வழங்குமாறு சுந்தரசாமி கவுண்டர் முருகானந்தத்திடம் முறையிட்டுள்ளார். 

ஆனால், அதற்கு முருகானந்தம் உரிய பதிலளிக்காததால், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அறிவுறுத்தலின்படி காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க அலைகழிக்கப்பட்டதால் கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சுந்தரசாமி மனு தாக்கல் செய்தார். 

மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் இந்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பா.ஜ.க தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம், அவரது தந்தை பழனிசாமி கவுண்டர், தாயார் வள்ளியம்மாள் ஆகியோர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தொடர்ந்து இந்த புகார்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக பாதிக்கப்பட்ட சுந்தரசாமி கவுண்டர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...