அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவியேற்குமாறு கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் சசிகலா படத்தின் மீது சாணி வீசியதால் பரபரப்பு


அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலாவை வரவேற்று மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியினர் வரவேற்பு தந்துவரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் அக்கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



இந்நிலையில், கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக தலைமையேற்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். 

அந்த போஸ்டரில் சசிகலா புகைப்படம் இருந்துள்ளது. இதைக்கண்டு கோபமுற்ற அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக பல ஆண்டுகளாக இருந்து வரும் புஷ்பா என்பவர் மாட்டு சாணத்தை வீசியுள்ளார்.



இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல் துறையினர் அதனை அப்புறப்படுத்தி போஸ்டரை கிழித்து எறிந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, அதிமுக-வின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை கொன்ற சசிகலா வரக்கூடாது என்பதற்காகத்தான் போஸ்டரில் மாட்டுச்சாணத்தை வீசியதாகவும், அம்மாவின் வாரிசான தீபா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக வந்தால் தாம் வரவேற்பதாகவும், எக்காரணத்தைக்கொண்டும் சசிகலாவை பொதுச்செயலாளராக வரவிடக்கூடாது என்றும் புஷ்பா தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...