கோவை மாநகராட்சியுடன் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் இணைந்து ஷ்வச்சதா செயலி நிறுவும் விழா கொண்டாட்டம்


கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் கோவை மாநகராட்சியுடன் இணைந்து ஸ்வச்சதா செயலியினை கைபேசியில் நிறுவும் விழா மற்றும் அதுகுறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும வளாகத்தில் நடைபெற்றது.

இதில், ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் விஎல்பி கல்லூரிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும், இதில், ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வச்சதா செயலி மற்றும் ஸ்வச்பாரத் குறித்தான விழிப்புணர்வினை பொதுமக்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் ஏற்படுத்தும் வகையில் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.



இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாணவர்களின் தூய்மை இந்தியா மீதான பங்களிப்பினை பாராட்டினார்.



இந்நிகழ்ச்சியில், ஆர்ஏஏசி தன்னார்வ அமைப்பினர், ஆர்க் பவுண்டேஷன் ஸ்வச் வுமன் வொன்டர் மற்றும் ஸ்வச்பாரத் வாட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



முன்னதாக, இதேப்போன்ற ஸ்வச்சதா செயலி மற்றும் ஸ்வச் பாரத் விழிப்புணர்வு நிகழ்ச்சி பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...