அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக-வால் மட்டுமே நிரப்ப முடியும் என தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


அ.தி.மு.கவில் ஜெயலலிதாவை போல தகுதி வாய்ந்த தலைவர்கள் யாருமே இல்லை எனவும் அதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜ.க-வால் மட்டுமே நிரப்ப முடியும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்

தில்லியில் கொலை செய்யப்பட்ட மருத்துவர் சரவணன் வீட்டிற்கு செல்வதற்காக கோவை வந்த தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டம் நாராயணபுரத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மூன்று பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதும், தொடர்ச்சியாக அப்பகுதியில் விபத்துகள் நடப்பதும் சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது. பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல்  அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தீக்காய சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும். இது தொடர்பான கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. 

மேலும், சுனாமியால் காணாமல் போனவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுனாமி நினைவு தினமான இன்று தமிழக முதல்வரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

வருமான வரித்துறை சோதனை மூலம் தமிழக அரசை மத்திய அரசு மிரட்டுவதாக சொல்லப்படும் வாதம் தவறானது. ஆதாரங்களின் அடிப்படையிலேயே சோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழகம் லஞ்ச ஊழலால் புறையோடிக்கிடக்கின்றது. அதை சரி செய்யும் பணியில் மத்திய அரசு உள்ளது.

தமிழகத்தில் இன்று ஏற்பட்டு இருக்கும் அரசியல் வெற்றிடத்தை பா.ஜ.க-வால் மட்டுமே நிரப்ப முடியும். ஜெயலலிதாவிற்கு இணையான தகுதி வாய்ந்த தலைவர்கள் அ.தி.மு.க வில் யாரும் இல்லை. அதனால், அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி மற்றவர்களை மிரட்டி ஆட்சி அமைக்க வேண்டிய அவசியல் பா.ஜ.க-விற்கு இல்லை''. இவ்வாறு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...