பேய்கள் நடமாடும் நேரத்தில் கோவில்களில் புத்தாண்டு தரிசனத்தை தடுக்க ஆட்சியரிடம் ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் மனு

பேய்கள் நடமாடும் இரவு 12 மணி நேரத்தில் கோவில்களில் புத்தாண்டு தரிசனம் செய்வதை தடுக்க வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் என்கிற வினோத் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



"வருகிற டிசம்பர் 31-ஆம் தேதியன்று இரவு புத்தாண்டு என்கின்ற பெயரில் அன்று இரவு கேளிக்கை விடுதிகளில் மது அருந்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று சாலை விபத்துகளை ஏற்படுத்துவோர் மீதும், இதன் மூலம் கலாச்சார சீரழிவு செய்துவரும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு முடக்க வேண்டும்.

இந்து ஆகம விதிப்படி இரவு 12 மணி நேரத்தில் பேய்கள் நடமாடும் நேரத்தில் புத்தாண்டு தரிசனம் என்கிற பெயரில் தமிழக அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஒரு சில கோவில்களில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

அந்த நேரத்தில் கோவில்களை திறக்கக் கூடாது, அது நம் அழிவிற்கு காரணமாக அமையும். அதனால், இதுபோன்ற இந்து விரோத செயல்களை தடுத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...