ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு உள்ளிட்ட தமிழர் வீரவிளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கோரி முதலமைச்சருக்கு மனு

ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு உள்ளிட்ட தமிழர் வீரவிளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சி-தமிழகம் சார்பில் கோவை மாவட்டத் தலைவர் வி.வி.மாணிக்கம், தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார். 



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழர்களின் பாரம்பரியமிக்க வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுக்கு தடைசெய்யும் வகையிலும், நாட்டு, பாரம்பரிய இனங்களை அழிக்கும் வகையிலும் பீட்டா என்னும் பிராணிகள் வதை அமைப்பு தொடர்ந்த வழக்கினால் மேற்குறிப்பிட்ட விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டு தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது.

உடனடியாக, ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...