நவஇந்தியாவில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு உரிய கிராஜிவிட்டியினை பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நவஇந்தியாவில் பணிபுரிந்த 285 தொழிலாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக கிராஜிவிட்டி வழங்கப்படாததால் உடனடியாக அதனை பெற்றுத தரக் கோரி நவஇந்தியா ஆர்.கே.ஐ- ஆர்.வி.எஸ் தொழிலாளர் கிராஜிவிட்டி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பு.வெ.கோபால், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

நவஇந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்த 285 தொழிலாளர்களுக்கு நிர்வாகம் இதுநாள் வரை வழங்க வேண்டிய 50 சதவிகித கிராஜிவிட்டி வழங்கவில்லை. தொழிலாளர் உதவி ஆணையரிடம் 2014 ஜூலை 15ம் தேதியன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி நடைபெறவில்லை. 

மேலும், 285 தொழிலாளர்கள் சார்பில் கோவை தொழிலாளர் கிராஜிவிட்டி கட்டுப்பாடு அதிகாரி முன் நடந்த விசாரணையில் 30 நாட்களுக்குள் கிராஜிவிட்டி வழங்க உத்தரவிட்டும் தற்போது வரை அது வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, கிராஜிவிட்டி சட்டப்படி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக கிராஜிவிட்டு பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...