ஆதரவற்றோர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மாணவர்கள் இணைந்து இன்று கிறிஸ்துமஸ் தினத்தினை ஆதரவற்றோர், முதியோர் இல்லம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் கொண்டாடினர்.



ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி துறையின் மாணவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கேக்குகளை தயாரித்து அதனை ஆதரவற்றோர் இல்லங்களில் வழங்கி கிறிஸ்துமஸ் தினத்தினை கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி இவ்வருடம், கிறிஸ்துமஸ் பண்டிகையினை முன்னிட்டு கோவைபுதூரில் அமைந்துள்ள ஹெல்பிங் ஹார்ட்ஸ் சில்ரன் என்னும் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்திலும், மற்றும் பீளமேடு பகுதியில் அமைந்துள்ள செசிர் ஹோம் (Cheshire) உள்ளிட்ட இடங்களில் தாங்கள் தயாரித்த கேக்குகளை கொடுத்து கொண்டாடினர்.



மேலும், அதன் ஒருபகுதியாக சமையல் அறிவியல் துறையின் சார்பாக ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் வளாகத்தில் கேக்குகள் கண்காட்சியும் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.



இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன், கல்லூரி முதல்வர் பி.பாபாஞானகுமார் உள்ளிட்டு ஆசிரியர்கள் சதிஷ்குமார், அர்ஜுனன், ரதிகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...