ஸ்வச் சர்வேக்ஷன் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலுள்ள 100 வார்டுகளில் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை கொண்டு ரேஸ்கோர்ஸ் சிறுவர் பூங்கா அருகில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். 



கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 என்பது “புகைப்படம் எடுப்போம்! மாற்றத்தை உறுவாக்குவோம்!” மற்றும் ஸ்வச்சதா செயலி என்பது “நமது கையில் விலையுயர்ந்த ஆயுதம் உள்ளது, புகைப்படம் எடுங்கள், ஸ்வச்சதா செயலி பதிவிறக்கம் செய்து உங்கள் பகுதியை செலவின்றி தூய்மைப் படுத்துங்கள்” என்று வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் ஏந்திய பிரச்சார வாகனங்கள் மூலமும் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. 

மேலும், இதன் தொடாச்சியாக ரேஸ்கோர்ஸ் சிறுவர் பூங்கா அருகில் 250க்கும் மேற்பட்ட கற்பகம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றிய துண்டு பிரசுரத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் இம்மாணவர்கள் வீடு வீடாக சென்று, பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு அளிப்பதற்கு பொது மக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய இடங்களான காந்திபுரம், ஆர்.எஸ்புரம் ஆகிய இடங்களில் ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

இதில், துணை ஆணையாளர் காந்திமதி, மத்திய மண்டல உதவி ஆணையர்(பொ)மோகனசுந்தரி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...