தமிழக தலைமை செயலர் வீட்டில் சோதனையிட்டதற்கு ஏன் மம்தா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் ? என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் கேள்வி


தமிழக தலைமை செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை செய்ததற்கு தமிழக முதல்வரும், எதிர்க் கட்சி தலைவரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மம்தா ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக இளைஞர் அணி செயற்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க -வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பேசுகையில்,

தமிழக தலைமை செயலர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே போல் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஸ்டாலினும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஏன் வருமான வரித் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

வருமான வரித்துறை சோதனைகளை எதிர்ப்பவர்கள் கறுப்பு பணத்தை ஆதரிப்பவர்கள் தான் என தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சசிகலா-வை சென்று பார்த்தது எந்த மாநிலத்திலும் நடக்காத நிகழ்வு!. இந்த அணுகுமுறை ஏற்றுகொள்ளத்தக்கது அல்ல என கூறினார். 

மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கு ஆதரவாக தான் செயல்பட்டு வருகிறது. தற்போது சட்ட ரீதியான ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு வாரணாசியில் பிரதமர் மோடி பதிலளித்துவிட்டதாக கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...