96-வது வார்டு பகுதியில் மாநகராட்சி ஆணையர் இன்று ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 96-வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி குளக்கரை பகுதியில் உள்ள நம்ம டாய்லெட்-ஐ மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதைத்தொடர்ந்து, சுந்தராபுரம், முருகா நகர், பெரியசாமி சேவா விதி ஆகிய பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனி நபர் கழிப்பிடத்தையும், 98-வது வார்டுக்குட்பட்ட எல்ஐசி காலனியில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினையும் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, முருகா நகர் பகுதியில் தனியார் இருசக்கர வாகன கடையில் தேவையில்லாத டயர்களை அகற்றும் படி பலமுறை அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த அதனை உரிமையாளர் அகற்றாததால், ஒரு லோடு டயர்களை மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டதை அவர் பார்வையிட்டார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...