விமான பயணியிடம் ரூ. 53 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய்- வருமான வரித்துறையினர் விசாரணை


டெல்லியில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த கென்ய இளைஞரிடமிருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இன்று காலை டெல்லியில் இருந்து கோவை வந்த இண்டிகோ விமானத்தில் கணக்கில் வராத புதிய ரூபாய் நோட்டுக்கள் கொண்டு வரப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்ட போது கென்யா நாட்டை சேர்ந்த கொகுகோ சிஜியோகி சுவெல்டா என்ற பயணியிடம் கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உரிய பதிலளிக்காததால் அவரை வருமான வரித்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சுவெல்டாவிடம் இருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ள வருமானத்த்துறையினர் இந்த பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...