முன்னாள் தி.மு.க அமைச்சர் தன்னிடமிருந்து லஞ்சம் பெற்றது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாக சரிதாநாயர் தகவல்


முன்னாள் தி.மு.க அமைச்சர் பழனிமாணிக்கம் தன்னிடமிருந்து 25 லட்சரூபாய் லஞ்சமாக பெற்ற விவகாரம் தொடர்பாக கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கோவையில் சரிதாநாயர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோவை வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்து தரும் நிறுவனம் நடத்தி அதன் மூலமாக சரிதாநாயர் அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் ரவி ஆகியோர் காற்றாலை அமைத்து தருவதாக கூறி ரூபாய் 28 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2009-ஆம் ஆண்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கின் விசாரணை கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் இன்று சரிதா நாயர் ஆஜரானார். அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 10-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரிதாநாயர், முன்னாள் தி.மு.க அமைச்சர் பழனி மாணிக்கம் தன்னிடம் 25 லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்ற விவகாரம் குறித்து தற்போது கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கேரள சோலார் பேனல் மோசடி வழக்கில் லஞ்சம் பெற்ற உமன்சாண்டி உள்ளிட்ட சில கேரள அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் சரிதாநாயர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...