இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் கவரும் வகையில் எம்.ஆர்.எப் "மசஸ்டர்டயர்" அறிமுகம்

இந்தியாவின் மிகப் பெரிய டயர் உற்பத்தி நிறுவனமான  எம்.ஆர்.எப்  ''மசஸ்டர்டயர்'' என்னும் இருசக்கர வாகனத்திற்கான நிகழ்ச்சியை நடத்தியது. மசஸ்டர்டயர் என்பது இருசக்கர வாகனங்களை சாலையில் நேர்த்தியாக இயக்குவது ஆகும். அதற்கு வாகனத்தின் டயர் மிகவும் கட்சிதமாக இருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியில், மசஸ்டர்டயர் இயக்குவதில் நேர்த்திபெற்றவர்கள் பஙகேற்று  எம்.ஆர்.எப்  டயரின் தொழில்நுட்பம் மற்றும் எவ்வித சாலையிலும் இயக்கத்தகுந்த  எம்.ஆர்.எப்  டயரை சோதனையிட்டனர்.

இவ்விழாவில்  எம்.ஆர்.எப்  லிமிட்டெட் விற்பனை நிர்வாக துணைத் தலைவர் கொஷி வர்கீஸ் பேசியதாவது:-

மக்களுக்கு மசஸ்டர் குறித்து அடிப்படை அறிவும், அனுபவமும் இருந்தால் மட்டுமே அதனை சரியான முறையில் இயக்க முடியும். டயரின் திறன், தன்மை மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை மசஸ்டர்க்கு மிக முக்கியம். சரியான பாதை, திறன்மிக்க டயர், அனுபவங்கள் இருப்பின் இந்த பயணம் மிக  நன்றாக அமையும். மேலும், இதில் ஈடுபடுபவர் தகுந்த பாதுகாப்புடன் ஈடுபட வேண்டும்'' என்றார்.

மசஸ்டர் டயர் இருசக்கர வாகனங்களுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் 150 சிசி மற்றும் அதற்கு மேலே உள்ள திறன்கொண்ட இருசக்கர வாகனத்தில் மட்டுமே இது சரியான முறையில் இயங்கும். இந்த டயர் ஒரு மென்மையான கலவை மற்றும் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடுமையான சாலையினையும் இந்த வகை டயர்கள் எளிதாக கடக்கும். செங்குத்தான வளைவுகளில் செல்லவும் இது சிறப்பாக உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், எம்.ஆர்.எப் டயர் சோதனைக் குழு மசஸ்டர் டயரினை அறிமுகம் செய்து அதன் சிறப்புகளை எடுத்துரைத்தனர். அப்போது மசஸ்டர் டயர் ஓட்டுநர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும் எனவும், பல்வேறு தொழில்நுட்பங்களால் தயாரிக்கப்பட்டுள்ள மசஸ்டர் டயர் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றும் பேசினர். தொடர்ந்து, இதன் தயாரிப்பில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள், தொழில்நுட்பம், வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...