கோவையில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறுதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் பகுதியிலிருந்து சரவணம் பட்டிக்கு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தடம் எண் 111A என்னும் பேருந்து  இயக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் பேருந்து பழதானதையடுத்து பேருந்தின் நடத்துனர் பயணிகளை  இறக்கிவிட்டு சுங்கம் பகுதியிலுள்ள பணிமனைக்கு  பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திருச்சி சாலை ரெயின்போ பகுதியில் வரும் போது  எதிர்பாராத  விதமாக  பேருந்தின்  முன்பகுதியிலிருந்து புகை வர ஆரம்பித்துள்ளது. 



இதனை பார்த்த ஓட்டுனர்பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்,அப்போது திடீரென பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு  வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.

பேருந்தில் திடீரென தீப்பற்றியெரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால்  வாகன ஓட்டிகள் சிறிது   நேரம் சிரமத்துக்குள்ளாயினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...