ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சர்வதேச அறிவியல் திருவிழாவில் முதல் பரிசு வென்றனர்


தில்லியில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திருவிழாவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர். 

ஸ்வச்பாரத் மற்றும் ஸ்டேடர்ஜிக் அப்லிகேசன் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெற்ற அறிவியல் போட்டிகளில் இப்பரிசினை ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான்பாரதி ஆகியவை இணைந்து இப்போட்டிகளை நடத்தியது. இதில் 3000 இளம் விஞ்ஞானிகள், 300 கல்வி சார் துறையினர், 200 தொழில் துறையினர் என பலர் பங்கேற்றனர்.

மாணவர்கள், ஸ்வச் பாரத், பசுமை ஆற்றல், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் தங்களது ஆய்வறிக்கைகளை வெளியிட்டனர். இதில் மொத்தமாக மாணவர்களிடம் இருந்து 1300 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இஐஇ, இசிஎஸ், இஇஇ, சிஎஸ்இ ஆகிய பாடப்பிரிவுகளில் பயிலும் ஆர்.நித்திஷா, ஆர்.பி.ஸ்ரீநாத், கோகுல்சண்முகம், என்.ராம்விக்ணேஷ், இ.விக்ணேஷ் மற்றும் ஏ.மணிகண்டன் ஆகிய மாணவர்கள் முதல் பரிசுகளை பெற்றனர்.

வெற்றிபெற்றோர்க்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஸ்வர்தா பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...