கோவையில் விவசாய தோட்டத்தில் யானைகள் நுழைந்ததால் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பயிர்கள் சேதம்.


கோவை அருகே விவசாய தோட்டத்திற்குள் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் நுழைந்து சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தியது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முத்துச்சாமி. இவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் நுழைந்து அங்கிருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைமரங்கள், 30 பாக்கு மரங்கள், மிளகாய் செடி மற்றும் மின்வேலி, சொட்டு நீர் பாசன குழாய்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளது. 

இதைத்தொடரந்து, யானைகளை விவசாயிகள் சேர்ந்து விரட்டியதை அடுத்து, பக்கத்தில் இருந்த தோட்டங்களுக்குள் சென்றும் யானைகள் சேதங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் அன்றாடம் யானைகள் தொல்லை இருந்து வருவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், யானைகளை விரட்ட வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் யாரும் வரவில்லை எனவும் விவசாயி முத்துச்சாமி புகார் தெரிவித்தார். 

மேலும், தனது தோட்டத்தில் சுமார் 4 லட்ச ரூபாய் அளவிற்கு யானைகள் கூட்டம் சேதங்களை ஏற்படுத்தி இருப்பதாக கூறிய அவர், யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார். 

யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், பயிர்களை பாதுகாக்க விடிய, விடிய யானைகளை விரட்ட வேண்டிய நிலை இருப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். 20-க்கும் மேற்பட்ட யானைக்கூட்டம் தோட்டங்களை சேதப்படுத்தி இருப்பது, அக்கிராம மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...