செயல்படாத நிலையில் இருக்கும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்-மிற்கு மாலை அணிவித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாத நிலையில் இருக்கும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்-மிற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி அமல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் பணபுழக்கம் தடைபட்டுள்ளது. பணம் எடுக்க மக்கள் வங்கிகள் முன்பாகவும், ஏ.டி.எம் மையங்கள் முன்பாகவும் நாள்தோறும் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகின்றது. 

கோவையில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் 90 சதவிகித ஏ.டி.எம்கள் செயல்படாமல் இருந்து வருகின்றது. 

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாத நிலையில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்திற்கு அனைத்திந்த இளைஞர் பெருமன்றத்தினர் மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அப்போது வங்கி ஏ.டி.எம்-கள் அனைத்தும் முழுமையாக செயல்படவும், 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் தடையின்றி கிடைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தை மாற்றுவதற்காக காலத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவினையும் அவர்கள் வழங்கினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...