குடியிருப்புகளுக்கு அருகே கழிவுகளை கொட்டிய லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்


கோவையில் குடியிருப்புகளுக்கு அருகே கழிவுகளை கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவையை அடுத்த வாளையாறு - நீலம்பூர் புறவழிச்சாலையில் கழிவுகளை ஏற்றி வந்த லாரியில் இருந்து, வட மாநில இளைஞர்கள் மூட்டைகளில் இருந்த கழிவுகளை பல்வேறு பகுதிகளில் கொட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளலூர் இடையர்பாளையம் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே மூட்டைகளை தூக்கி வீசியதை பார்த்த பொதுமக்கள், கழிவுகளை கொட்டிய லாரி மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேரை சிறைபிடித்தனர். 



இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் காவல் துறையினரிடம் லாரியையும், லாரியில் இருந்தவர்களையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கோவை வின்செண்ட் சாலையை சேர்ந்த லாரி உரிமையாளரும், ஓட்டுநருமான சையத் அபுதாகீர் மற்றும் 6 வட மாநில இளைஞர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கழிவுகள் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழக- கேரள எல்லையோர கிராமங்கள், நீலம்பூர் புறவழிச்சாலை பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். 

மேலும், கழிவுகளை கொட்டும் லாரிகளுக்கு அபராதம் பெற்றுக்கொண்டு விடுவித்து விடுவதாகவும், கழிவுகளை கொட்டும் லாரிகளை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். கழிவுகள் கொட்டும் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினரிடம் குழப்பம் நீடிப்பதாக கூறிய கிராம மக்கள், கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...