எஸ்டீ லாடர் மற்றும் பிக்கி இணைந்து மகளிருக்கான அழகுபடுத்துதல் நிகழ்ச்சி

எஸ்டீ லாடர் மற்றும் பிக்கி இணைந்து மேக்கப், தோல் பராமறிப்பு மற்றும் நறுமணம் உள்ளிட்டவை குறித்து இன்று டிசம்பர் மாத விழக்காலத்தை மனதில் கொண்டு நிகழ்ச்சி நடத்தியது. கோவை தாஜ் ஹோட்டலில் உள்ள டேங்கோ அரகில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மிஷஸ் இந்தியா 2016 விருது பெற்ற ஜெயாமகேஷ் துவக்கி வைத்தார். இன்று காலை 9 மணியளவில் துவங்கிய இந்நிகழ்ச்சி மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்குபெரும் மகளிருக்கு இலவசமாக தோல் பராமறிப்பு சிகிச்சை, அழகுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து இலவசமாக எடுத்துரைக்கப்பட்டு சிகிச்சைகளும் அளிக்கப்படும்.

இதுகுறித்து கோவை பிக்கி தலைவர் நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிக்கி என்பது இந்தியா முழுவதும் உள்ள ஒரு அமைப்பு ஆகும். பிக்கி மகளிர் அமைப்பு பிரிவு துவங்கி வரும் மார்ச் 2017 உடன் 25 வருடத்தை நிரைவு செய்கிறது. இவ்வமைப்பு பெண்களை ஊக்குவிக்க தனி கவணம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தனியார் நிறுவன பெண்களுடன் இணைந்து இவ்வமைப்பு பல நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

வருடம் முழுவதும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியானது தனியார் நிறுவன பெண்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்டது. இன்றைய சவாலான பணிச்சூழல் நிரைந்த காலகட்டத்தில் பெண்கள் தங்களை சிறப்பாக வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும். இது இன்றைய காலகட்டத்தின் கட்டாயம்.

சிறந்த ஆடை அழங்காரம் பெண்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்'' என்றார்.

பணிச்சூழலில் அழகு மட்டுமே போதுமானதா என்ற கேள்விக்கு "அழகு மட்டும் போதுமானதல்ல, அழகுடன் இணைந்து திறமையும் பணியில் தேவை. அழகும், திறனும் சமமாக இருக்க வேண்டும்'' என்றார். மேலும், காலை துவக்கத்தில் 50 பேர் இந்த அழங்கார நிகழ்ச்சிக்கு வந்தனர், மாலை 6 மணிக்குள் 200-க்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

பிராண்டு ஆலோசகர் மஞ்சுஷா மகேஷ்வரி கூறுகையில், இந்த நிகழ்வின் பொருள் வண்ணங்களில் இருந்து பிறந்த அழங்காரப் புரட்சி ஆகும். இந்தியர்கள் அனைவரும் அழங்காரத்திற்கான ஒரு அடிப்படையினை தெரிந்துள்ளனர். அழங்காரங்கள் வண்ணங்கள் கொண்டு அழகுபடுத்துதல், தோல்பராமறிப்பு, ஆடை அழங்காரம், புதிய தோற்றம் என பல உள்ளன. அவற்றை குறித்து பெரும்பாலானோர் தெரிந்துள்ளனர்.

இன்றைய நிகழ்வில் நாங்கள் குறிப்பாக தோல் பராமறிப்பு குறித்தும், அதிலும் குறிப்பாக இரவு நேர பராமறிப்பு குறித்தும் எடுத்துரைத்துள்ளோம். அனைவரும் பகல் நேரங்களில் அழங்காரம் செய்வதில் முனைப்பு காட்டுகின்றனர். ஆனால் இரவு நேர அழங்காரத்தில் கவணம் செலுத்துவது இல்லை. பகல் நேரத்தில் தோலில் ஏற்படும் பாதிப்புக்கு இரவு நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். எஸ்டீ லாண்டர் இரவு நேர தோல் பராமறிப்பினை வழங்குகிறது'' என்றார்.

இன்றைய அவசர காலகட்டத்தில் பெண்கள் எப்படி அழங்காரத்திற்கு நேரம் செலுத்தமுடியும் என்று கேட்டபோது ''நாங்கள் 3 நிமிட அழங்கார சேவையை வழங்கி வருகிறோம். இதன் மூலம் ஒரே அழங்காரப் பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு அழங்காரம் செய்வது என கற்றுத்தரப்படுகிறது. அழகாக காட்சியளிப்பது நமக்கு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் தருகிறது. அந்த மகிழ்ச்சி முகத்தின் மூலம் வெளிப்படுகிறது'' என்றார்.

இதுகுறித்து மேலும் தகவலுக்கு 9626244000, 9920185006 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது [email protected] என்ற இணையதல முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...