திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா முன்னிட்டு நீதிக்கட்சி கொள்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த புத்தகம் வெளியீடு

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா வருகின்ற டிசம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இதில் நீதிக்கட்சி கொள்கை வரலாறு மற்றும் சாதனைகள் குறித்த 100 புத்தகங்கள் வெளியிட உள்ளது. 

இதுகுறித்து, தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

திராவிட இயகங்களின் முன்னோடி அமைப்பான நீதிகட்சி தனது கொள்கைகளை பிரகடனம் செய்து நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், திராவிட இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடைபெற உள்ளது. 

வருகின்ற 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த விழாவில் நீதிக் கட்சியின் வரலாறு மற்றும் அதன் சாதனைகள் குறித்த தொகுப்புகள் அடங்கிய நூறு புத்தகங்களை வைகோ வெளியிட உள்ளார், அதனை தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் இராசேந்திரன் பெற்றுக்கொள்ள உள்ளார்.

இவ்விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நீதியரசர் அரிபரந்தாமன், திமுக பாராளுமன்ற உறுப்பினர் மு.இராமநாதன், தகலான் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்ற உள்ளனர்.

தொடர்ச்சியாக கருத்தரங்கும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. தமிழகத்தை தனித்தன்மை கொண்ட மாநிலமாக காரணமான நீதி கட்சியின் கொள்கை பிரகடன நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் கருப்புச் சட்டை பேரணியும் நடத்தப்பட உள்ளது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்'' என அவர் கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...