அழகு மற்றும் சுகாதார மேம்பாட்டுக்கு என கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய மருத்துவமனை மையம் துவக்கம்

அழகு மற்றும் சுகாதாரமான ஆரோக்கியத்திற்கான சிகிச்சைக்கு என கோவை ஆர்.எஸ்.புரத்தில் மருத்துவமனை மற்றும் சலூன் இன்று திறந்து வைக்கப்பட்டது. இது சலூன் மையமாகவும், உடலின் மேற்பரப்பில் அழகு தொடர்பாக ஏற்படும் நோய்கள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளது.



இந்த மையத்தினை விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "ஒரே இடத்தில் மேம்படுத்தப்பட்ட சலூன் சேவைகளும், ஒரு முழுவசதிகளுடன் அழகு மையமும் செயல்படுவது இதுவே முதல் முறை. இச்சேவை கோவை மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இதன் மூலம் கோவை மக்கள் தங்கள் அழகு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தி பயனடைய வேண்டும்'' என்றார்.

பார்க் கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா கூறுகையில், "எல்லோரும் ஒருமுறையாவது இந்த மருத்துவமனை சேவைகளை பெற வேண்டும். இந்த அழகு மருத்துவமனை அழகு மற்றும் சுகாதார துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்'' என்றார்.

மிர்ஷஸ் யெர்த் 2016 விருது பெற்ற ஜெயா மகேஷ், "இது ஒரு அழகு மற்றும் சுகாதாரத்திற்கு என துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவர் தங்களது அழகை மெருகூட்டிக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்'' என்றார்.

ஜுவல் ஒன் அன்டு எம்ரால்டு நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், இந்த அழகு மருத்துவமனை அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார்.

எம்எல்ஆர் நிர்வாக இயக்குநர் கேசிஆர் பாலாஜி, ஒரு இடத்தில் அழகு தொடர்பாக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த மையம் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...