குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'அங்காடி 2016'


கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்கள் சங்கம் சார்பில் 'அங்காடி 2016' என்ற இரண்டு நாள் சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று துவங்கியது. இக்கண்காட்சியினை ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் சொர்ணலதா தொடக்கி வைத்தார். 



இது குறித்து மாணவர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் சங்கீதா கூறுகையில், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் மூன்றாவது முறையாக இந்த வருடமும் வணிகவியல் துறை சார்பில் 'அங்காடி' என்னும் தலைப்பில் சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 



இந்நிகழ்ச்சி வணிகவியல் துறை மாணவர்களுக்காக நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் வணிகத்துறையில் சிறந்து விளங்கவும், முன்னோடியாக திகளவும் இது போன்ற நிகழ்வுகள் உதவியாக இருக்கும். இரண்டுநாள் நடைபெறும் இந்நிகழ்வில் மாணவர்களுக்கு தொழில் துறையில் பல்வேறு வகையில் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட அரங்குகளும், 180 மாணவர்களும் கலந்து இந்நிகழ்வை நடத்துகின்றனர்'' என கூறினார்.



இதில், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் குமார், இயக்குநர் விஜிலா கென்னெடி மற்றும் வணிகவியல் துறை மாணவர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக ஐந்து அரங்குகளில் தன்னார்வ அமைப்புகளான பசுமை கோவை சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...