டிச. 23 முதல் கொடிசியா வளாகத்தில் கோவை சாப்பீங் திருவிழா துவக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் டிசம்பர் 23 முதல் 2017 ஜனவரி 1ம் தேதி வரை கோவை சாப்பீங் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த 10 நாள் கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களின் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. 

இக்கண்காட்சியில், வீட்டு அழங்காரப் பொருட்கள், இயற்கை உணவுகள், பரிசுப் பொருட்கள், சூரிய சக்தியால் இயங்கும் கருவிகள், நீர்சுத்திகரிப்பு இயந்திரம், பாதுகாப்பு கருவிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் என பலதரப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. மேலும், இக்கண்காட்சியில் 400 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

இதுகுறித்து கோவை சாப்பீங் திருவிழா தலைவர் கே.விஷ்வநாதன் கூறுகையில், கோவையில் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்த கோவை சாப்பீங் திருவிழா 2016 ஒரு கருவியாக இருக்கும். கொங்குப்பகுதியில் தொழில் மற்றும் வளர்ச்சியை ஒரு முன்னேற்றுப் பாதையில் எடுத்துச் செல்லும். அதே வேலையில் கோவையில் ஒரு பெருமை மிகு நிகழ்வாக இந்த சாப்பீங் திருவிழா அமையும்'' என்றார்.

மேலும், இந்நிகழ்வில் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோரின் நாட்டுப்புர பாட்டு கலைநிகழ்ச்சிகளும் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் உணவுக்கு என்று தனி அரங்கும், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கும் அமைக்கப்படவுள்ளது. மேலும் பணமில்லா பரிவர்த்தனைக்காக ஏடிஎம் அட்டை பயன்படுத்தும் கருவியும் பொருத்தப்பட உள்ளது.

இதற்கான நுழைவுக் கட்டணம் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகவும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.30 ம் வசூழிக்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...