சிறுகுறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்கள்

சிறுகுறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்ட ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்கள் தற்போது ஆய்வில் உள்ளது என்றும், விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றும் அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மேலும் தகவலறிந்த  அந்த வட்டாரத்தினர் கூறியதாவது:-

"தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அம்மா வென்சர் கேபிட்டல் ஃபன்ட் திட்டத்தின் மூலம் சிறுகுறு தொழில் துவங்குவோர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன் முதற்கட்டமாக அம்மா வென்சர் கேபிட்டல் ஃபன்டின் மூலம் ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது சென்னை பயோடேக் இன்குபேசன்-க்கு வழங்கப்பட்ட ரூ.20 கோடி போலவே கையாளப்படும்.

பெண்களுக்கான கோல்டன் ஜீபிலி பய்யோ டெக் பார்க் தமிழக அரசின் உயிரியல் துறையும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து துவங்கப்பட்டது. இந்த 5000 சதுர அடி பரப்பளவில் உள்ள இன்குபேசன் மையம் 2021-ம் ஆண்டுக்குள் 500 தொழில் முனைவோர்களுக்கு அடித்தலமாக அமைந்திருக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் ஏற்கனவே 2 பெண் தொழில் முனைவோர்கள் பயனடைந்து வருகின்றனர். இப்புத்தாண்டில் மேலும் பல தொழில்முனைவோர்களை கண்டறிய உள்ளோம்.

தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சகம் இதற்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் புதிதாக துவங்கப்படும் நிறுவனம் 1 கோடி ரூபாய் வரை நிதியுதவி பெற முடியும். இதன் மூலம் பெங்களூரைப் போலவே சென்னையிலும் புதிய தொழில் துவங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. 

இதற்கான மூலதனம் கடனாகவும், முதலீடாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த முதலீட்டில் 25 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். மேலும், தொழில் துவங்குவதற்கான முதலீட்டில் 75 சதவிகிதம் கடனாக வழங்கப்படும். இதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கான நிதி மத்திய அரசிடம் இருந்து பெறப்பட உள்ளது. ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டேன்டப் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். இந்த திட்டம் மத்திய அரசு அறிவித்த 10 ஆயிரம் கோடிக்கான சிறந்த திட்டமாகும்.

தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான செயல்பாட்டில் உள்ளது. நாங்கள் தற்போது மத்திய அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்'' என அந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...