அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெ.வுக்கு கண்ணீர் அஞ்சலி

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து நாடு முழுக்க பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். 



இந்த நிலையில், ஜெயலலிதா மறைந்து 16-வது நாளான இன்று கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்திற்கு உட்பட்ட ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்காநல்லூரை அடுத்த உப்பிலியபாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் நல தலைவர் கோவை ஜெயபால் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்த நிகழ்வில் பொது மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...