கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புதிய வடிவில் கேக்குகள் அறிமுகம்!


கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் கேக் நிறுவனம் இந்த ஆண்டு புதுமையாக மனித உருவ வடிவில் கேக்குகளை செய்யும் பணியை துவங்கி உள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் கேக் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட புதிய விதமாக கேக்குகள் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு உருவ படத்தை கேக்குகளை பொறித்தும், குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் பொம்மைகளை கொண்டும் தயாரித்தது.



அதேப்போல் இந்த ஆண்டு விருப்பமானவர்களின் உருவத்தை கேக் சிலையாக செய்ய துவங்கி உள்ளது. குறிப்பாக திருமண ஜோடிகள், பிரியமானவர்களின் உருவம், கிருஸ்துமஸ் தாத்தா உருவம் என தயாரித்து வருகின்றனர்.

இந்த மாதிரியான உருவ கேக் சிலைகளை செய்ய 5 ஆயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்டர்  கொடுத்து ஒரு வாரத்தில் விரும்பிய உருவம் கேக் சிலையாக செய்து கொடுக்கப்படும் எனவும் கேக் வடிவமைப்பாளர் சுபஸ்ரீ தெரிவித்துள்ளார்.

அதே போல் சாக்லெட், பிஸ்தா உள்ளிட்ட அனைத்து வகையான கேக்குகளும் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். குறிப்பாக மனித உருவ வடிவ கேக்குகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...