மூடப்பட்ட தனியார் நிறுவனத்தில் மீண்டும் பணி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு மனு அளித்த பெண் தொழிலாளர்கள்

கோவையில் டி.டி.எல் என்ற தனியார் வைரம் பட்டை தீட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் வைரம் பட்டை தீட்டும் மையங்கள் நரசிம்மநாயக்கன் பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது.



இந்நிலையில் சூலூரில் செயல்பட்டு வரும் நிறுவனத்தை கதவடைப்பு செய்த நிர்வாகத்தினர், அதில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள நிறுவனத்திற்கு மாற்றியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அந்நிறுவனத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

ஆட்சியர் அலுவலக வாயில் முன் அமர்ந்த பெண் ஊழியர்கள் தனியார் நிறுவனம் கதவடைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது சூலூரில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிக்கு செல்ல 40 கி.மீ தூரம் என்பதால் அனைத்து பெண் தொழிலாளர்களும் சென்று வர முடியாது எனவும், எனவே சூலூரில் உள்ள நிறுவனம் தொடந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுத்தினர். 

பெண்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்கள், அவரிடம் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், பெண் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...