மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்து விற்பனை செய்யும் மருந்தகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுமென எச்சரிக்கை


கோவையில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்துக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுமென மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தமிழ்மணி கூறுகையில், 

மருந்தங்கள் மற்றும் மருந்து கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்த மருந்துகளையும் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

குறிப்பாக வலி நிவாரணி மற்றும் வலி நீக்க மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது எனவும், வலி நீக்க மருந்துகளை மருத்துவர்களின் கண்காணிப்பு இல்லாமல் உட்கொள்வதால் சிறுநீரகம் மற்றும் ஈரல் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

மேலும், இந்த விதிமுறையை கடுமையாக அமல்படுத்தும் வகையில் ஒரு உதவி இயக்குநர் மற்றும் 6 மருந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாகவும், போதியளவு மருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும் கூறிய அவர், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...