சிறந்த மாநகராட்சி சேவைக்காக' டிஜிட்டல் இந்தியா' விருது பெற்ற கோவை மாநகராட்சி ஆணையர்



மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, மாநகராட்சியில் கவனிப்பாரற்று உள்ள குப்பைத் தொட்டிகள், சிதிலமடைந்த சாலைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதற்காக என பல திட்டங்கள் டிஜிட்டல் வழியில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு அதில் வரும் புகார்களுக்கு உடனடி தீர்வுகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மேற்கொண்டார்.

மேலும், பல திட்டங்களுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்து ஏராளமான தகவல்கள் மற்றும் நலத்திட்டங்களை நடைமுறையில் கொண்டுவந்துள்ளார்.



இதனை பாராட்டும் வகையில், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா விருது 2016 கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயனுக்கு திங்களன்று வழங்கப்பட்டது.

புதுதில்லியில் அமைந்துள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நிதித்துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பம், சட்டம் மற்றும் நிதித்துறை மத்திய இணை அமைச்சர் பி.பி.சௌதிரி ஆகியோர் இணைந்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர்க்கு டிஜிட்டல் இந்தியா வெள்ளி விருது வழங்கினர்.

இந்நிகழ்வின் போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன், கூடுதல் செயலாளர் அஜய்குமார், மத்திய தகவலியல் மைய தலைமை இயக்குநர் நீட்டா வெர்மா மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் அல்கா மிஸ்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா விருதும் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவை நகர மாநகராட்சி மட்டுமே குடிமக்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ள நகரமாகும். இது கோவை வாழ் மக்களுக்கு ஒரு பெருமைமிகு தருணம். நம்முடைய மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அதற்கு ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளார். அதுமட்டுமின்றி அனைவரும் மாநகராட்சியின் மேம்பாட்டில் பங்கேற்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு 26 திட்டம் சார்ந்த வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளது. அக்குழுக்கள் மூலம் தற்போதுவரை 40 திட்டங்கள் குடிமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நிரைவேற்றப்பட்டுள்ளது.

இவை அனைத்திற்கும் காரணம், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன், பல்வேறு கட்ட குடிமக்களுடன் இணைந்து பணியாற்றுவதே ஆகும்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...