அரசு நிலத்தை அ.தி.மு.க பொருளாளர் ஆக்கிரமிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை அருகே 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அ.தி.மு.க பொருளாளர் ஆறுமுகம் என்பவர் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 6.50 ஏக்கர் பரப்பளவில் மழையூர் மேட்டுக் குட்டை உள்ளது. தண்ணீர் தேக்கி வைப்பதற்காக இந்த குட்டையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டையில் 2.50 ஏக்கர் நிலத்தை சுத்தப்படுத்தி சைட் பிரிக்கும் முயற்சியில் 61-வது வார்டு அ.தி.மு.க பொருளாளர் ஆறுமுகம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டு அ.தி.மு.க நிர்வாகியை முற்றுகையிட்டதையடுத்து சைட் பிரிக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து புகார் அளிக்க தி.மு.க மாவட்ட பிரதிநிதி பட்டணம் செல்வகுமார் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், குட்டையில் கரைகளை உடைக்கும் பணியில் பொக்கலைன் இயந்திரத்துடன் ஆறுமுகம் மற்றும் அவரது உதவியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் எனவும் அதை ஆக்கிரமிக்க ஆறுமுகம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

மேலும், அப்பாவி பொதுமக்கள் 191 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு பட்டா பெற்றுத் தர முயற்சிப்பதாகவும், உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பட்டணம் செல்வகுமார் கேட்டுக் கொண்டார். அரசு கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக ஆக்கிரமிக்க முயற்சி செய்யும் அ.தி.மு.க நிர்வாகி ஆறுமுகம் மற்றும் அவருக்கு உதவிய உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...