பொதுமக்களை தற்கொலைக்கு தூண்டும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பு மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் சி பி ஐ எம் மனு


பொதுமக்களை தற்கொலைக்கு தூண்டும் மைக்ரோ பைனான்ஸ் அமைப்பின் மீது நடவடிக்கை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு சார்பில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து, அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத் தேவைக்காக மைக்ரோ பைனான்ஸ் அமைப்புகள் மூலம் மாதாந்திர தவணைக் கடன் பெற்றுள்ளனர்.

குறைந்தபட்சம் 9 பேரிலிருந்து 45 பேர் வரை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு தனிநபர் ஜாமீன் பெற்று 24 தவணையில் கடன் வாங்கியுள்ளனர். இதில் கடந்த நவம்பர் மாதம் வரை முறையாக தவணைத் தொகை செலுத்திவந்த நிலையில் மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டு தடையால் சிறுசிறு வியாபாரம் மூலம் வருமானம் ஈட்டிவந்த சாமான்ய மக்களின் வருமானம் முடங்கிபோயுள்ளது.

இந்நிலையில், மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெறப்பட்ட மாதாந்திர தவணைத் தொகையை செலுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொள்ளாத மைக்ரோ பைனான்ஸ் பொறுப்பாளர்கள் பெண்களை மிகக் கேவலமாக திட்டி அவமானப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக "பெண்கள் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள் பெயரில் காப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்களிலிருந்து பணம் திரும்ப கிடைத்துவிடும். எனவே, தற்கொலை செய்து கொள்ளுங்கள்" என மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...