கோவை மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி சமூக நீதிக் கட்சி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்ட சமூக நீதிக் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, சூலூர், சுல்தான் பேட்டை, செஞ்சேரி மலை, அன்னூர், கீரணத்தம், கல்லிப்பட்டி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இரட்டைக் குவளை, சலூன்களில் முடிவெட்ட மறுப்பது, தனி சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு தீண்டாமைகள் நிலவிவருகிறது. 

இதுகுறித்து கடந்த 10 வருடத்திற்கும் மேலாக புகார் அளித்தும் விசாரிக்க வரும் அதிகாரிகள் கையூட்டுப்பெற்றுவிட்டு நடவடிக்கை எடுக்காமல் சென்றுவிடுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக காட்டி விடுதி காப்பாளர்கள் சமையல் உள்ளிட்ட செலவுகளில் அரசிடம் கூடுதல் பணம் பெறுகின்றனர். பல விடுதிகளில் காப்பாளர்கள் விடுதிக்கு வருவதே இல்லை. 4 மாணவர்கள் மட்டுமே விடுதியில் உள்ள நிலையில் 60 மாணவர்கள் என கணக்கு காட்டி ஆயிரக் கணக்கில் ஒரு விடுதில் கொள்ளையடிக்கப்படுகிறது.



இதுகுறித்தும் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக நீதிக் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ந.பன்னீர் செல்வம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...