சாட்டிலைட் டிஷ் மூலம் தமிழகம் முழுவதும் ஈஷா யோகா வகுப்பின் ஆனந்த அலை நேரடி ஒளிபரப்பு

சத்குருவால் நேரடியாக தமிழில் நடத்தப்படும் ஈஷா யோகா 2-நாள் வகுப்பு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. முதல் முறையாக சாட்டிலைட் டிஷ் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள 63 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

மேலும், இவ்வகுப்புகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 21 ஆயிரத்து 786 பேர் பங்கேற்றனர். சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு சத்குரு எடுக்கின்ற நேரடி தமிழ் வகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழகம் முழுவதும் நேரலை வகுப்பு

சென்னை, திருச்சி, சேலம், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், முக்கிய இடங்களில் இவ்வகுப்புகள் நடைபெற்றது. பயிற்சி நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் தேர்ச்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் பங்கேற்பாளர்களுக்கு துணை இருந்தனர். இவ்வகுப்பிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஈஷா தன்னார்வ தொண்டர்கள் மூலம் மதிய உணவு பரிமாறப்பட்டது. 



ஈரோடு, தர்மபுரி, சேலம், கோபி, ஓசூர், காங்கேயம், கிருஷ்ணகிரி, பெருந்துறை, திருப்பூர், வெள்ளக்கோவில் உட்பட தமிழகத்தின் மேற்கு மாவட்ட நகரங்களில் நடைபெற்ற யோக வகுப்புகளில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற வகுப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்





இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது:-

நான் வழங்கும் இந்த யோக வகுப்பில் தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ் மக்களின் உயிர்துடிப்பிற்கு தலைவணங்குகிறேன். சில தலைமுறைகளுக்கு முன் இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் ஆன்மீகசாதனை இருந்தது. அதனை மீண்டும் உருவாக்குவதற்கான நேரமிது. 

36 வருடங்களுக்கு முன் துவங்கிய இந்த தன்னை உணர்தலுக்கான அமைதிப்புரட்சி இனியும் அமைதியாய் இல்லை, கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. பல பேரின் உயிர்களை, இத்தனை சக்தியாய் தொடுவதற்கான ஒரு வாய்ப்பு பல தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். இதனை நாம் நிகழச் செய்வோம்" என்றார்.

ஈஷா யோகா சார்பில் சென்னை 10 ஆயிரம் மரக்கன்றுகள்:-

வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகரத்தில் நடைபெற்ற வகுப்புகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும் இலவசமாக சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதனை நட்டு, பாதுகாத்து வளர்க்க அனைவரும் உறுதி எடுத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...